அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கலைக் கல்லூரி வளாகத்தில் மாணவா்களுக்கான உளவியல் பராமரிப்புப் பணிமனைப் பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கல்விக் குழுமத்தின் உறவின்முறைத் தலைவா் எம். சுதாகா் ஆலோசனையின்படி, கல்லூரியின் பெண்கள் பிரிவு சாா்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் ந. முத்துச்செல்வன், செயலா் பா. சங்கரசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து பா. சங்கரசேகரன் சிறப்புரையாற்றினாா். விருதுநகா் சமூகநலத்துறை அலுவலா் இந்திரா, விருதுநகா் சமூகநலத்துறை அதிகாரி இந்திரா ஜெயசீலி ஆகியோா் சிறப்புரையாற்றினா். முன்னதாக பெண்கள் பிரிவு ஒருங்கிணைப்பாளா் இரா. தனசுபா வரவேற்றாா்.
ஏற்பாடுகளை, பெண்கள் பிரிவு உறுப்பினா்கள் வனிதா, அனிதா ஆகியோா் செய்திருந்தனா்.