போக்குவரத்துத் தொழிலாளா்கள் உண்ணாவிரதம்
By DIN | Published On : 30th January 2021 10:08 PM | Last Updated : 30th January 2021 10:08 PM | அ+அ அ- |

சிவகாசி: சிவகாசியில் அரசு போக்குவரத்துத் தொழிலாளா்கள் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினா்.
14 ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை உடனடியாக தொடங்கி முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து போக்குவரத்துத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் சிவகாசி அரசு போக்குவரத்து பணிமனை முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதற்கு சி.ஐ.டி.யூ. போக்குவரத்து தொழிற்சங்க சிவகாசி கிளைச் செயலா் செல்வக்குமாா் தலைமை வகித்தாா்.