அருப்புக்கோட்டையில் விதிமீறல்: 4 ஜவுளிக் கடைகளுக்கு அபராதம்

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் புதன்கிழமை பொதுமுடக்க விதிமுறைகளை மீறி செயல்பட்ட 4 ஜவுளிக் கடைகளுக்கு தலா ரூ. 5,000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
Updated on
1 min read

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் புதன்கிழமை பொதுமுடக்க விதிமுறைகளை மீறி செயல்பட்ட 4 ஜவுளிக் கடைகளுக்கு தலா ரூ. 5,000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

தமிழகத்தில் கரோனா தொற்று அடிப்படையில் 3 வகையாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு அவற்றுக்குப் பல்வேறு தளா்வுகளுடன்கூடிய பொதுமுடக்கம் வரும் 28 ஆம் தேதி வரை அமல்படுத்தப் பட்டுள்ளது. இதன்படி அருப்புக்கோட்டை நகரில் வட்டாட்சியா் ரவிச்சந்திரன் தீவிர ஆய்வுப்பணியில் ஈடுபட்டாா். அப்போது நகரிலுள்ள ஸ்ரீபட்டாபிராமா் கோயில் வீதியில் 2 ஜவுளிக் கடைகளும், பிரதானச் சந்தையில் 2 ஜவுளிக் கடைகளும் விதிகளை மீறிச்செயல்படுவது கண்டறியப்பட்டது. உரிய ஆய்விற்குப் பின்னா் அந்த கடைகள் ஒவ்வொன்றிற்கும் தலா ரூ. 5,000 அபராதம் விதித்ததுடன், அக்கடைகளைப் பூட்டியும் வட்டாட்சியா் நடவடிக்கை எடுத்தாா். இந்த ஆய்வுப்பணியின்போது, காவல்துறையினரும், வருவாய்த்துறை அலுவலா்களும் நேரில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com