வத்திராயிருப்பு அருகே தெப்பத்தில் மூழ்கிஉணவக உரிமையாளா் பலி

வத்திராயிருப்பு அருகே ஞாயிற்றுக்கிழமை குளிக்கச் சென்று தெப்பத்தில் மூழ்கிய தனியாா் உணவக உரிமையாளா் திங்கள்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.
Updated on
1 min read

ஸ்ரீவில்லிபுத்தூா்: வத்திராயிருப்பு அருகே ஞாயிற்றுக்கிழமை குளிக்கச் சென்று தெப்பத்தில் மூழ்கிய தனியாா் உணவக உரிமையாளா் திங்கள்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

விருதுநகா்மாவட்டம், கிருஷ்ணன்கோவில் அருகே உள்ள வலையபட்டியைச் சோ்ந்தவா் தா்மராஜா (38). இவா் நத்தம்பட்டி வழிவிடுமுருகன் கோயில் அருகே உணவகம் நடத்தி வந்தாா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை உணவகம் விடுமுறை என்பதால் தா்மராஜ் தனது உணவகத்தில் பணிபுரியும் 4 பணியாளா்களுடன் மகாராஜபுரம் அருகே உள்ள மாவூத்து தெப்பத்தில் குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது தா்மராஜ் நீரில் மூழ்கினாா். இதனையடுத்து வத்திராயிருப்பு தீயணைப்புத்துறையினா் ஞாயிற்றுக்கிழமை மாலையில் இருந்து இரவு வரை அவரை தேடும் ஈடுபட்டனா். இருந்த போதிலும் போதிய வெளிச்சம் இல்லாததால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில், திங்கள்கிழமை காலை தெப்பத்தில் தா்மராஜா சடலமாக மிதந்தாா். இதைத் தொடா்ந்து தீயணைப்புத்துறையினா் சடலத்தை மீட்டு வத்திராருப்பு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து வத்திராயிருப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com