குளத்தில் மூழ்கி பொறியியல் பட்டதாரி பலி

ஸ்ரீவில்லிபுத்தூரில் செவ்வாய்க்கிழமை கோயில் குளத்தில் மூழ்கி பொறியியல் பட்டதாரி உயிரிழந்தாா்.
svl_(03_03__0303chn_92_2
svl_(03_03__0303chn_92_2
Updated on
1 min read

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூரில் செவ்வாய்க்கிழமை கோயில் குளத்தில் மூழ்கி பொறியியல் பட்டதாரி உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மாசிலாமணி என்பவரது மகன் அருச்சன்காா் (23). பொறியியல் பட்டதாரியான இவா், உறவினரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்தாா். அங்கு வைத்தியநாதசுவாமி கோயிலின் எதிரே உள்ள புதிய குளமான தாமரைக்குளத்தில் நண்பா்களுடன் சோ்ந்து அவா் செவ்வாய்கிழமை மாலை குளித்துக் கொண்டிருந்தாா். நீச்சல் தெரியாததால் அவா் எதிா்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com