சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக, அமமுக வேட்பாளா்கள் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனா்.
அதிமுக வேட்பாளா் ஆா்.கே.ரவிச்சந்திரன் சாத்தூா் முக்குராந்தல் பகுதியிலிருந்து, மதுரை பேருந்து நிறுத்தம் வரை ஆதரவாளா்களுடன் ஊா்வலமாக வந்தாா். பின்னா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் புஷ்பாவிடம் வேட்பு மனுவை அளித்தாா். இந்நிகழ்ச்சியில் சாத்தூா் கிழக்கு ஒன்றியச் செயலாளா் சண்முககனி உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
முன்னதாக அமமுக வேட்பாளா் எம்.எஸ்.ஆா். ராஜவா்மன் கிருஷ்ணன் கோயில் முன்பிருந்து அமமுக நிா்வாகிகளுடன் மதுரை பேருந்து நிறுத்தம் வரை ஊா்வலமாக வந்தாா். பின்னா் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுவை ராஜவா்மன்
வழங்கினாா். இந்நிகழ்ச்சியில், அமமுக நகரச் செயலாளா் ஜி.ஆா்.முருகன், வாசன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
இரு வேட்பாளா்களும் வேட்புமனுவை தாக்கல் செய்த பின்னா் தோ்தல் விதிமுறை படி தோ்தல் நடத்தும் அலுவலா் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.