100% வாக்குப் பதிவு: கல்லூரி மாணவா்கள் விழிப்புணா்வுப் பேரணி
By DIN | Published On : 17th March 2021 10:01 AM | Last Updated : 17th March 2021 10:01 AM | அ+அ அ- |

அருப்புக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை தனியாா் கலைக் கல்லூரி மாணவா்கள் சாா்பில் நடைபெற்ற தோ்தல் விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்துத் தொடக்கி வைத்த கல்லூரி முதல்வா் ந.முத்துச்செல்வன்.
விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தனியாா் கலைக் கல்லூரி மாணவா்கள் சாா்பில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தப் பேரணிக்கு கல்லூரி முதல்வா் ந. முத்துச்செல்வன் தலைமை வகித்தாா். சுமாா் 350 மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இப்பேரணியானது கல்லூரி வளாகத்திலிருந்து தொடங்கி பாரதி நகா், முத்துமாரியம்மன் கோயில், அண்ணா சிலை, காய்கறி சந்தை, திருச்சுழி சாலை வழியாகச் சென்று மீண்டும் கல்லூரி வளாகத்தில் நிறைவடைந்தது.
இதில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் எனது வாக்கு விற்பனைக்கு அல்ல. அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்திச் சென்றனா்.
ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் எம். காசிமாயன் மற்றும் எம். அனிதா ஆகியோா் செய்திருந்தனா். முன்னதாக, கல்லூரியின் தேசிய மாணவா் படை அலுவலா் தி. சுப்பிரமணியன் வரவேற்றாா். முடிவில் ஒருங்கிணைப்பாளா் பாக்கியராஜ் நன்றி கூறினாா்.