கூடி வாழ்ந்தால் தேடி வரும் வேட்பாளர்கள்!

சிவகாசி அருகே பூசாரிபட்டி கிராமத்தில் இரண்டு கூட்டுக் குடும்பங்களில் மொத்தம் 141 வாக்குகள் உள்ளதால் பிரதானக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இவர்களது வாக்குகளை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கூடி வாழ்ந்தால் தேடி வரும் வேட்பாளர்கள்!
கூடி வாழ்ந்தால் தேடி வரும் வேட்பாளர்கள்!

சிவகாசி அருகே பூசாரிபட்டி கிராமத்தில் இரண்டு கூட்டுக் குடும்பங்களில் மொத்தம் 141 வாக்குகள் உள்ளதால் பிரதானக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இவர்களது வாக்குகளை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 விருதுநகர் மாவட்டம்- சிவகாசி அருகே பூசாரிபட்டி கிராமத்தில் சுமார் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு விவசாயம் மற்றும் பட்டாசு தொழில் பிரதானமாக உள்ளது.

 இந்தக் கிராமத்தில் பெரும்பாலானோர் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். அதில் குறிப்பாக பெருமாள்சாமி என்பவர் தலைமையிலான கூட்டுக் குடும்பத்தில் 150-க்கு மேற்பட்டோரும், பூசாரி நாயக்கர் என்பவர் குடும்பத்தில் 90 குடும்ப உறுப்பினர்களும் உள்ளனர். இதில் பெருமாள்சாமி குடும்பத்தில் மட்டும் 80 வாக்காளர்களும், பூசாரி நாயக்கர் குடும்பத்தில் 61 வாக்காளர்களும் என இரண்டு குடும்பங்களிலும் மொத்தம் 141 வாக்குகள் உள்ளன.

 இவர்களின் வாக்குகளைப் பெறுவதற்கு பிரதான அரசியல் கட்சிகள் உள்பட அனைத்துக் கட்சியினரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். பல தலைமுறைகளாக கூட்டுக் குடும்பமாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் இவர்கள், தங்களது வாக்கு "விற்பனைக்கு அல்ல' என்பதில் உறுதியாக உள்ளனர். மேலும், தேர்தல் நாளன்று ஒட்டு மொத்த குடும்பத்தினரும் ஆர்வத்துடன் சென்று வாக்களிக்க உள்ளதாகவும், வாக்களிப்பது தங்களது ஜனநாயக கடமை என்கின்றனர்.

 வானம் பார்த்த பூமியான எங்களது பகுதியில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் கட்சியினருக்கே தாங்கள் வாக்களிக்க உள்ளோம். இது குறித்து குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கலந்தாலோசித்து முடிவெடுத்து வாக்களிப்போம். அதேநேரம் எங்களது வாக்குகள் விற்பனைக்கு அல்ல; வாக்குக்கு பணம் வாங்க மாட்டோம் என தெரிவித்தனர்.

 தங்கள் குடும்பத்தினர் எந்தக் கட்சியையும் சார்ந்து இல்லாததால் அனைத்துத் தரப்பினரும் எங்களிடம் வாக்கு கேட்டு வருகின்றனர். அவ்வாறு வருபவர்கள் பிரதான கட்சி வேட்பாளராக இருந்தாலும், சுயேச்சை வேட்பாளராக இருந்தாலும் அவர்களுக்கு உரிய மரியாதை அளிப்போம் என பூசாரிபட்டி நாயக்கர் குடும்பத்தை சேர்ந்த வெடிமுத்து தெரிவித்தார். இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுக, அமமுக, மநீம என பலமுனைப் போட்டி நிலவுவதால் இவர்களது மொத்த வாக்குகளையும் பெற பல்வேறு அரசியல் கட்சியினர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com