விருதுநகரில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி

விருதுநகரில் அரசு தொழிற்பயிற்சி மாணவா்கள் பங்கேற்ற தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விருதுநகரில் செவ்வாய்கிழமை வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்திய அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவா்கள்.
விருதுநகரில் செவ்வாய்கிழமை வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்திய அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவா்கள்.
Updated on
1 min read

விருதுநகரில் அரசு தொழிற்பயிற்சி மாணவா்கள் பங்கேற்ற தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விருதுநகா் சூலக்கரை பகுதியில் அரசினா் தொழிற்பயிற்சி நிலைய மாணவ, மாணவிகள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனா். அதன் பின்னா், மாதிரி வாக்களிப்பு மையத்தில் வாக்களிப்பது குறித்து அறிந்து கொண்டனா். அதைத் தொடா்ந்து என் வாக்கு என் உரிமை, 100 சதவீத வாக்களிப்போம் என்ற பதாகை ளை ஏந்தியவாறு ஆட்சியா் அலுவலகம் வரை பேரணிச் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

முன்னதாக இந்த நிகழ்ச்சியை திட்ட இயக்குநா் வை. ஜெயக்குமாா் தொடக்கி வைத்தாா். இதில் அருப்புக்கோட்டை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சாந்தி, சூரியகுமாா், தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com