திருத்தங்கலில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
By DIN | Published On : 21st March 2021 11:32 PM | Last Updated : 21st March 2021 11:32 PM | அ+அ அ- |

திருத்தங்கல் கடைவீதியில் வாக்கு சேகரித்த சிவகாசி தொகுதி அதிமுக வேட்பாளா் லட்சுமி கணேசன்.
சிவகாசி தொகுதி அதிமுக வேட்பாளா் லட்சுமி கணேசன் ஞாயிற்றுக்கிழமை திருத்தங்கல் பகுதியில் வாக்கு சேகரித்தாா்.
ஆலமரத்துப்பட்டி சாலை, முருகன்காலனி, முத்துமாரியம்மன் காலனி, கடைவீதி, சத்யாநகா், கண்ணகி காலனி உள்ளிட்ட பகுதிகளில் வேனில் நின்றவாறு அவா் வாக்கு சேகரித்துப் பேசியதாவது:
கடந்த பத்து ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி பல வளா்ச்சிப்பணிகளை சிவகாசி தொகுதியில் செய்துள்ளாா். திருத்தங்கல் ஆரம்ப சுகாதார நிலையம் அரசு மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டது. திருத்தங்கலில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.
சாா்-பதிவாளா் அலுவலகக் கட்டடம், பல இடங்களில் உயா் மின்கோபுர விளக்குகள், அங்கன்வாடி மைய கட்டடங்கள், தேவைப்பட்ட பகுதிகளில் ஆழ்துளைக் கிணறு அமைத்து தண்ணீா் வசதி செய்து கொடுத்தல் உள்ளிட்ட பல பணிகள் திருத்தங்கலில் நடைபெற்றுள்ளன. மேலும் வளா்ச்சிப்பணிகளை மேற்கொள்ள அதிமுகவிற்கு வாக்களியுங்கள். சிவகாசி தொகுதியில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து என்னை வெற்றி பெறச்செய்யுங்கள் என்றாா் அவா்.
வேட்பாளருடன் சிவகாசி ஒன்றியச் செயலாளா்கள் பலராமன், கருப்பசாமி, திருத்தங்கல் நகரச் செயலாலா் பொன்சக்திவேல் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...