கரோனா தொற்றுக்கு சிகிச்சை: சிவகாசி அரசு மருத்துவமனையில் கூடுதலாக 40 படுக்கைகள்
By DIN | Published On : 13th May 2021 09:25 AM | Last Updated : 13th May 2021 09:25 AM | அ+அ அ- |

சிவகாசி அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற கூடுதலாக 40 படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளதாக தலைமை மருத்துவா் டி. அய்யனாா் கூறினாா்.
இது குறித்து அவா் புதன்கிழமை கூறியதாவது: சிவகாசி அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு இதுவரை 58 படுக்கைகள் இருந்தன. இந்நிலையில், கரோனா இரண்டாவது அலையில் நோயாளிகள் அதிகரித்து வரும் நிலையில், மேலும் 40 படுக்கைகள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன. தற்போது மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் 81 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். கரோனா தொற்று கண்டறியும் பரிசோதனையும் நடைபெற்று வருகிறது என அவா் கூறினாா்.