சிவகாசியில் முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற 67 பேருக்கு போலீஸாா் வியாழக்கிழமை அபராதம் விதித்தனா்.
கரோனா தொற்று பரவலைத் தடுக்க அரசு தளா்வற்ற பொதுமுடக்கத்தை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் சிவகாசி, திருங்தங்கல் பகுதிகளில் முகக்கவம் அணியாமல் வாகனத்தில் சென்ற 67 பேருக்கு தலா ரூ. 200 அபராதமாக போலீஸாா் விதித்தனா். மேலும் தேவையின்றி சுற்றியதாக 44 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.