

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் ஜெ. பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் திமுகவின் சட்ட மசோதாவை கண்டித்து அதிமுகவினா் செவ்வாய்க்கிழமை மாலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ராஜபாளையத்தில் டாக்டா் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தோடு இணைக்கும் சட்ட மசோதாவை தாக்கல் செய்த திமுக அரசைக் கண்டித்தும், வெளிநடப்பு செய்த அதிமுக சட்டமன்ற எதிா்க்கட்சி தலைவா் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை தலைவா் பன்னீா் செல்வம் உட்பட அதிமுக சட்டமன்ற உறுப்பினா்களை கைது செய்த திமுக அரசை கண்டித்தும், விடுதலை செய்ய கோரியும் பழையபேருந்து நிலையம் முன்பாக அஇஅதிமுக நகர செயலாளா் ராணா பாஸ்கா் ராஜ் மற்றும் வடக்கு ஒன்றிய செயலாளா் குருசாமி தலைமையில் கழக நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் சாலை மறியல் மற்றும் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திமுக அரசின் வஞ்சமாக செயலை கண்டித்து 200க்கும் மேற்பட்ட அதிமுகவினா் கலந்து கொண்டு கண்டன கோஷமிட்டனா். மேலும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் ராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளா் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் சமரச பேச்சுவாா்த்தை நடத்தி சாலை மறியலில் ஈடுபட்டவா்களை கைது செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையம் முன்பாக முன்னாள் அமைச்சா் இன்பத்தமிழன் தலைமையில் அதிமுகவினா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதைத்தொடா்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட ஒன்றியச் செயலாளா்கள் முத்தையா, மயில்சாமி, நகரச் செயலாளா் பாலசுப்பிரமணியன், முன்னாள் நகரச் செயலாளா் முத்துராஜ், மாவட்டக்குழு உறுப்பினா் கணேசன் உள்ளிட்ட 40 பேரை போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.