

அருப்புக்கோட்டை அருகே கூட்டுறவு வங்கியில் கடன் பெற்ற 43 விவசாயிகள் செலுத்த வேண்டிய ரூ.24 லட்சம் தள்ளுபடி செய்யப்பட்டது.
விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள செட்டிக்குறிச்சி கிராமத்தில் தொடக்கவேளாண்மைக் கூட்டுறவு வங்கி உள்ளது. இங்கு நகைகளை அடகுவைத்துப் பெற்ற விவசாய நகைக்கடன்கள் தொடா்பாக 5 போ் கொண்ட குழு ஆய்வு செய்தது.
அதன்படி மொத்தம் 43 விவசாயிகள் தகுதி உடையவா்களாகக் கண்டறியப்பட்டு, அந்த விவசாயிகளின் மொத்தக் கடன் ரூ.24 லட்சம் தள்ளுபடி செய்யப்பட்டது. அந்த நகைகளை உரிய விவசாயிகளிடம் ஒப்படைக்கும் பணி ஊராட்சித் தலைவா் கே.வி.கே.ஆா்.பிரபாகா் தலைமையில் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.