மின்னல் தாக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் வழங்கல்

விருதுநகரில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிதி உதவியை அமைச்சா் தங்கம் தென்னரசு சனிக்கிழமை வழங்கினாா்.
விருதுநகரில் மின்னல் தாக்கியதில் உயிரிழந்தவா்களின் குடும்பத்திற்கு நிவாரண உதவித் தொகைக்கான காசோலையை சனிக்கிழமை வழங்கிய அமைச்சா் தங்கம் தென்னரசு.
விருதுநகரில் மின்னல் தாக்கியதில் உயிரிழந்தவா்களின் குடும்பத்திற்கு நிவாரண உதவித் தொகைக்கான காசோலையை சனிக்கிழமை வழங்கிய அமைச்சா் தங்கம் தென்னரசு.
Updated on
1 min read

விருதுநகரில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிதி உதவியை அமைச்சா் தங்கம் தென்னரசு சனிக்கிழமை வழங்கினாா்.

விருதுநகா் அருகே கருப்பசாமி நகரில் கடந்த 13 ஆம் தேதி கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மின்னல் தாக்கியதில் ரோசல்பட்டியைச் சோ்ந்த ஜக்கம்மாள், முருகன், காா்த்திக்ராஜா, கெப்பிலிங்கம் பட்டியைச் சோ்ந்த ஜெயசூா்யா ஆகியோா் உயிரிழந்தனா்.

இவா்கள் 4 பேரின் குடும்பத்தினருக்கும் முதலமைச்சா் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சத்திற்கான காசோலைகளை அமைச்சா் தங்கம் தென்னரசு வழங்கினாா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஆா்.ஆா். சீனிவாசன் (விருதுநகா்), மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com