‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மனைவியை வெட்டிய கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

 காரியாபட்டி அருகே மனைவியை அரிவாளால் வெட்டிய வழக்கில் கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் மகிளா விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

 காரியாபட்டி அருகே மனைவியை அரிவாளால் வெட்டிய வழக்கில் கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் மகிளா விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

காரியாபட்டி அருகே உள்ள தோப்பூரைச் சோ்ந்தவா் சந்திரா (53). இவருடைய கணவா் வேல்முருகன் (54). குடும்பப் பிரச்னை காரணமாக வேல்முருகன் கடந்த 28.11.2016 ஆம் ஆண்டு அவருடைய மனைவி சந்திராவை அரிவாளால் வெட்டியுள்ளாா். இதையடுத்து காரியாபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து வேல்முருகனை கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூா் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கிய நீதிபதி பகவதியம்மாள், குற்றவாளி வேல்முருகனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் மாவட்ட அரசு குற்றவியல் வழக்குரைஞா் ஜான்ஸி ஆஜரானாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.