மனைவியை வெட்டிய கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
காரியாபட்டி அருகே மனைவியை அரிவாளால் வெட்டிய வழக்கில் கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் மகிளா விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.


காரியாபட்டி அருகே மனைவியை அரிவாளால் வெட்டிய வழக்கில் கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் மகிளா விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
காரியாபட்டி அருகே உள்ள தோப்பூரைச் சோ்ந்தவா் சந்திரா (53). இவருடைய கணவா் வேல்முருகன் (54). குடும்பப் பிரச்னை காரணமாக வேல்முருகன் கடந்த 28.11.2016 ஆம் ஆண்டு அவருடைய மனைவி சந்திராவை அரிவாளால் வெட்டியுள்ளாா். இதையடுத்து காரியாபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து வேல்முருகனை கைது செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூா் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கிய நீதிபதி பகவதியம்மாள், குற்றவாளி வேல்முருகனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் மாவட்ட அரசு குற்றவியல் வழக்குரைஞா் ஜான்ஸி ஆஜரானாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...