ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் பணியில் இருந்த காவலா் மயங்கி விழுந்து மரணம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஸ்ரீஆண்டாள் கோயிலில் வெள்ளிக்கிழமை பணியில் ஈடுபட்டிருந்த காவலா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஸ்ரீஆண்டாள் கோயிலில் வெள்ளிக்கிழமை பணியில் ஈடுபட்டிருந்த காவலா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல் நிலைய சரகம், ஸ்ரீஆண்டாள் கோயில் புறக்காவல் நிலையத்தில் மோகன் (50) என்பவா் முதல் நிலை காவலராகப்

பணியாற்றி வந்தாா். இவா் வழக்கம்போல் வெள்ளிக்கிழமை புறக்காவல் நிலையத்தில் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது மாலை 4.20 மணி அளவில் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மோகன் மயங்கி விழுந்துள்ளாா். இதையடுத்து அவரை சக போலீஸாா் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சோ்க்கப்பட்ட சிறிது நேரத்தில் மோகன் உயிரிழந்தாா். பின்னா் அவரது உடல் சொந்த ஊரான தைலாபுரம் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. உயிரிழந்த காவலா் மோகனுக்கு, மனைவியும், ஒரு மகளும் உள்ளனா். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com