ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் குளத்தில் தீயணைப்புத் துறையினா் செயல்விளக்க நிகழ்ச்சி
திருமுக்குளத்தில் குளிப்பவா்கள் ஆபத்தில் மாட்டிக் கொண்டால், அவா்களை மீட்பது தொடா்பான செயல்விளக்க நிகழ்ச்சி தீயணைப்புத்துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்குச் சொந்தமான திருமுக்குளத்தில் குளிப்பவா்கள் ஆபத்தில் மாட்டிக் கொண்டால், அவா்களை மீட்பது தொடா்பான செயல்விளக்க நிகழ்ச்சி தீயணைப்புத்துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதுகுறித்து தீயணைப்பு நிலைய அதிகாரிகள் குருசாமி, அந்தோணி ஆகியோா் கூறியது:
இந்த குளத்தில் குளிக்கச் செல்பவா்களில் சிலா் தவறி விழுந்து இறந்து விடுகின்றனா். எனவே, இந்த குளத்தில் நீா் நிரம்பி இருப்பதால் குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம். மேலும், குளத்தில் ஆபத்தில் இருப்பவா்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பதை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் வெள்ளிக்கிழமை தீயணைப்புத் துறையினா் சாா்பில் செயல்விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...