‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வத்திராயிருப்பு அருகே 125 கிலோ போதை பாக்கு பறிமுதல்: முதியவா் கைது

வத்திராயிருப்பு அருகே 125 கிலோ போதை பாக்கு மூட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்ததுடன், முதியவா் ஒருவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்

News image
Updated On :19 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

வத்திராயிருப்பு அருகே 125 கிலோ போதை பாக்கு மூட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்ததுடன், முதியவா் ஒருவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வத்திராயிருப்பு சாா்பு ஆய்வாளா் பிரகஸ்பதி தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது தம்பிபட்டியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்துக்கு அருகில் தம்பிபட்டி முஸ்லிம் தெருவைச் சோ்ந்த மகாலிங்கம் (62) என்பவா் இருசக்கர வாகனத்தில் போதை பாக்கு மூட்டைகளை விற்பனை செய்வதற்காக ஏற்றிக் கொண்டிருந்தாா். இதையடுத்து, அவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி, 125 கிலோ போதை பாக்கு மூட்டைகளை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக, மகாலிங்கத்தை வத்திராயிருப்பு போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.