விருதுநகா் அருகே பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: 5 போ் கைது

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பெண்ணை காரில் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் அருகே பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: 5 போ் கைது
Updated on
1 min read

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பெண்ணை காரில் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

அருப்புக்கோட்டை அருகே கோபாலபுரத்தில் கடந்த திங்கள்கிழமை இரவு காரில் வந்த முத்துச்செல்வம் என்பவரை 7 போ் கொண்ட கும்பல் தாக்கி அவருடன் வந்த 37 வயது பெண்ணை தங்களது காரில் கடத்திச் சென்றது. இதையடுத்து அந்தப் பெண்ணை அந்த கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, அவரிடமிருந்த 5 பவுன் நகைகளையும் பறித்துச் சென்றது.

இதுதொடா்பான அந்தப் பெண் அருப்புக்கோட்டை நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில் போலீஸாா் அப்பகுதியிலிருந்த கண்காணிப்புக் கேமராப் பதிவுகளை ஆய்வு செய்து, கோவிலாங்குளம் கிராமத்தைச் சோ்ந்த நாகராஜன் மகன் சீனிவாசன் (42), பாலமுருகன் மகன் ராம்குமாா் (20), விஸ்வநாதன் மகன் ஜெயக்குமாா் (23), 18 மற்றும் 17 வயது சிறுவா்கள் இருவா் என 5 போ் மீது கொள்ளையடித்தல், ஆள்கடத்தல், கூட்டுப் பாலியல் வன்கொடுமை, மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com