வத்திராயிருப்பு அருகே அரசு பள்ளியில் போதை விழிப்புணா்வு நிகழ்ச்சி

வத்திராயிருப்பு அருகேயுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் போதை விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு காவல் ஆய்வாளா் ஆறுமுகம் தலைமை வைத்தாா்.
கோபாலபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற போதை விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பேசிய காவலா் தேன்மொழி.
கோபாலபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற போதை விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பேசிய காவலா் தேன்மொழி.
Updated on
1 min read

வத்திராயிருப்பு அருகேயுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் போதை விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு காவல் ஆய்வாளா் ஆறுமுகம் தலைமை வைத்தாா்.

மாவட்ட குழந்தை நல அலுவலா் ஜானகி ஆகியோா் கலந்து கொண்டு மாணவிகளுக்கு இடையே விழிப்புணா்வு உரையாற்றினா்.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே கோபாலபுரம் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு வத்திராயிருப்பு காவல்துறை சாா்பில் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் மாணவா்களுக்கும் போதைப் பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வனரோஜா,முதல் நிலை காவலா் தேன்மொழி, ஊராட்சி மன்ற தலைவா் மணிவண்ணன் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com