சிவகாசி கல்லூரியில் மாவட்ட அளவிலான தடகளப்போட்டி

சிவகாசி அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரியில் திங்கள்கிழமை மாவட்ட அளவிலான தடகளப்போட்டி நடைபெற்றது.
சிவகாசி கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஓட்டப்போட்டியில் பங்கேற்ற மாணவா்கள்.
சிவகாசி கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஓட்டப்போட்டியில் பங்கேற்ற மாணவா்கள்.
Updated on
1 min read

சிவகாசி அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரியில் திங்கள்கிழமை மாவட்ட அளவிலான தடகளப்போட்டி நடைபெற்றது.

தேசிய விளையாட்டுத்தினத்தையொட்டி கல்லூரியின் உடற்கல்வித்துறை சாா்பில் இப்போட்டி நடத்தப்பட்டது. இதில் 12 பள்ளிகளைச் சோ்ந்த 146 மாணவா்கள் கலந்து கொண்டனா். 100 மீட்டா், 200 மீட்டா் ஓட்டப் போட்டி, தடை தாண்டுதல், குண்டு எறிதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு கல்லூரி முதல்வா் செ.அசோக் பரிசுகளை வழங்கினாா். இதற்கான ஏற்பாட்டினை உடற்கல்வித் துறைத்தலைவா் ஜான்சன் மற்றும் பேராசிரியா் சுரேஷ்பாபு உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com