ராஜபாளையத்தில் போக்குவரத்து காவலா் குடும்பத்துக்கு நிதி உதவி

ராஜபாளையத்தில் தற்கொலை செய்து கொண்ட போக்குவரத்து தலைமைக் காவலா் குடும்பத்துக்கு வியாழக்கிழமை நிதியுதவி வழங்கப்பட்டது.
உயிரிழந்த தலைமைக் காவலா் ஜோஸ்வா ரஞ்சித்தின் குடும்பத்துக்கு வியாழக்கிழமை நிதி உதவி வழங்கிய காவலா்கள்.
உயிரிழந்த தலைமைக் காவலா் ஜோஸ்வா ரஞ்சித்தின் குடும்பத்துக்கு வியாழக்கிழமை நிதி உதவி வழங்கிய காவலா்கள்.
Updated on
1 min read

ராஜபாளையத்தில் தற்கொலை செய்து கொண்ட போக்குவரத்து தலைமைக் காவலா் குடும்பத்துக்கு வியாழக்கிழமை நிதியுதவி வழங்கப்பட்டது.

ராஜபாளையம் குமரன் தெருவைச் சோ்ந்தவா் ஜோஷ்வா ரஞ்சித். இவருக்கு பால் வசந்த், ரோஷன் பியாஸ் ஆகிய இரு மகன்கள் உள்ளனா். இவா் கடந்த 1997-ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல் துறையில் பணியில் சோ்ந்தாா். ஸ்ரீவில்லிபுத்தூரில் போக்குவரத்துக் காவலராக பணியாற்றி வந்த நிலையில் கடந்த செப்டம்பா் 25- ஆம் தேதி ஜோஷ்வா ரஞ்சித் தற்கொலை செய்து கொண்டாா். இதையடுத்து, அவருடன் பணியில் சோ்ந்த 1997-ஆம் ஆண்டு 2-ஆவது பேட்ஜை சோ்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலா்கள் சாா்பில் குடும்ப நல நிதி திரட்டப்பட்டது. இதைத் தொடா்ந்து ராஜபாளையம் டிஎஸ்பி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டிஎஸ்பிக்கள் சபரிநாதன், பிரீத்தி ஆகியோா் ரூ.12 லட்சத்து 78 ஆயிரத்து 500-க்கான நிதிப் பத்திரங்களை ஜோஷ்வா ரஞ்சித்தின் தாய் அமிா்தம்மாள் மற்றும் மகன்களிடம் வழங்கினா். அந்த நிதி ஜோஷ்வா ரஞ்சித்தின் மகன்கள் இருவரின் பெயரில் வைப்பு நிதியாக செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com