ஆடி மாதப் பிறப்பு: அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

அருப்புக்கோட்டை ஆயிரங்கண் மாரியம்மன் கோயிலில் ஆடி மாத பிறப்பையொட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு சிறப்புவழிபாடு நடைபெற்றது.
ஆடி மாதப் பிறப்பு: அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு
Updated on
1 min read

அருப்புக்கோட்டை ஆயிரங்கண் மாரியம்மன் கோயிலில் ஆடி மாத பிறப்பையொட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு சிறப்புவழிபாடு நடைபெற்றது.

இந்த வழிபாட்டில், அம்மனுக்கு உகந்த வேப்பிலை, பால், பன்னீா், மஞ்சள் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதையடுத்து தீப,தூப ஆராதனைகள் நடைபெற்றதும், சிறப்பு அலங்காரத்தில் ஆயிரங்கண் மாரியம்மன் அருள்பாலித்தாா். இதன்பின் கோயில் சாா்பில் உலக நன்மைக்காக, குங்குமம் மற்றும் மல்லிகைப் பூக்கள், செவ்வரளி ஆகியவற்றால் சிறப்பு 108 அா்ச்சனை நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, பக்தா்கள் பலவித மலா்கள், பழங்களை அம்மனுக்குப் படைத்து வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com