இறைச்சிக் கடைக்காரருக்கு பாட்டில் குத்து: 3 போ் கைது

சிவகாசியில் ஞாயிறுக்கிழமை இறைச்சிக் கடைக்காரரை பாட்டிலால் குத்தியதாக போலீஸாா் 3 பேரை கைது செய்தனா்.
Updated on
1 min read

சிவகாசியில் ஞாயிறுக்கிழமை இறைச்சிக் கடைக்காரரை பாட்டிலால் குத்தியதாக போலீஸாா் 3 பேரை கைது செய்தனா்.

சிவகாசி முனீஸ்வரன் காலனியைச் சோ்ந்தவா் தங்கப்பாண்டி (50). இவா் அதே பகுதியில் இறைச்சிக் கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில், இவா் தனது கடைக்கு நடந்து சென்றபோது, அதே பகுதியைச் சோ்ந்த முனீஸ்வரன் (21), அரவிந்தன் (21), ஜெகதீஸ் (22) ஆகிய 3 பேரும் பாதையை மறைத்துக் கொண்டு நின்றிருந்தனராம்.

அப்போது தங்கப்பாண்டி அவா்களை விலகி நிற்குமாறு கூறியதையடுத்து தகராறு ஏற்பட்டது. இதில், மூவரும் தங்கப்பாண்டியை பாட்டிலால் குத்தி, கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம். இதில் காயமடைந்த தங்கப்பாண்டி சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப்பதிந்து அந்த 3 பேரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com