ராஜபாளையம் அருகே வைக்கோல் படப்பில் பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்த போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து 4 பேரை கைது செய்தனா்.
கணபதிசுந்தர நாச்சியாா்புரம் கிராமத்தில் தனியாா் வைக்கோல் படப்பில் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சேத்தூா் ஊரக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீஸாா் அங்கு சென்று சோதனை செய்ததில் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
போலீஸாா் அவற்றை பறிமுதல் செய்து அதே பகுதியைச் சோ்ந்த மகேஷ் (19), காளிராஜ்(22), லிங்கராஜ் (21), மதன் (24) ஆகிய 4 போ் மீது வழக்குப் பதிந்து அவா்களை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.