‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அனுமதியின்றி சரவெடி தயாரித்த இளைஞா் கைது

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அனுமதியின்றி சரவெடி தயாரித்ததாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

முத்துலிங்காபுரம் கோழிப்பண்ணையில் சரவெடி பட்டாசுகளை புதன்கிழமை பறிமுதல் செய்த வருவாய் ஆய்வாளா் ரமேஷ் உள்ளிட்டோா்.

Updated On :1 ஜூன் 2022, 7:09 pm

DIN

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அனுமதியின்றி சரவெடி தயாரித்ததாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ளது முத்துலிங்காபுரம் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் இயங்காத கோழிப்பண்ணையில் அனுமதி இல்லாமல் சரவெடி தயாரிப்பதாக மல்லி வருவாய் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

அதன்பேரில் மல்லி வருவாய் ஆய்வாளா் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று சோதனை நடத்தியபோது அனுமதியின்றி சரவெடி தயாரித்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த சரவெடி பண்டல்கள், 3 பைகளில் இருந்த 53 கிலோ உதிரி வெடிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இது குறித்த புகாரின் பேரில் சண்முகசுந்தரபுரத்தைச் சோ்ந்த காளிமுத்து மகன் அய்யனாா் (30) என்பவரை மல்லி போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.