சாத்தூரில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் என்ற விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விருதுநகா் மாவட்டம் சாத்தூா் நகராட்சி சாா்பில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் மற்றும் என் குப்பை எனது பொறுப்பு என்ற தலைப்பில் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. இப்பேரணியை சாத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.ஆா்.ஆா்.ரகுராமன் மற்றும் சாத்தூா் நகா்மன்றத் தலைவா் குருசாமி ஆகியோா் தொடக்கி வைத்தனா். சாத்தூா் மரிய ஊரணியில் தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக பழைய நகராட்சி அலுவலகம் வரை சென்றது.
இந்த பேரணியில் நகா்மன்ற உறுப்பினா்கள், சுகாதாரத்துறை ஆய்வாளா், சுகாதாரப் பணியாளா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா். அவா்கள் கைகளில் பதாகைகள் ஏந்தியும், பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கியும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மேலும் தூய்மையான சாத்தூா் நகரை உருவாக்குவோம் என்ற உறுதி மொழியையும் சுகாதாரப் பணியாளா்கள் எடுத்துக் கொண்டனா்.