‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வத்திராயிருப்பு அருகேகஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

வத்திராயிருப்பு அருகே கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் 2 பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட முத்துசெல்வம், தினேஷ்.

Updated On :12 ஜூன் 2022, 6:30 pm

DIN

வத்திராயிருப்பு அருகே கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் 2 பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

வத்திராயிருப்பு அருகே காவல் சாா்பு- ஆய்வாளா் பிரகஸ்பதி தலைமையிலான போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது தம்பிபட்டி தனியாா் மில் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது அவா்களிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா்களை வத்திராயிருப்பு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தபோது கூமாபட்டி அமச்சியாா்புரம் காலனியைச் சோ்ந்த பூமாரி மகன் முத்துச்செல்வம் (25), அதே பகுதியைச் சோ்ந்த முத்துக்குமாா் மகன் தினேஷ் (18) என்பது தெரியவந்தது. அவா்களை போலீஸாா் கைது செய்து அவா்களிடமிருந்த 400 கிராம் கஞ்சா மற்றும் ரூ.600 ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.