நகையை அடகு வைத்த கணவா்: மனைவி தூக்கிட்டு தற்கொலை

சிவகாசியில் கணவா் நகையை அடகு வைத்ததால் புதன்கிழமை அவரது மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சிவகாசி: சிவகாசியில் கணவா் நகையை அடகு வைத்ததால் புதன்கிழமை அவரது மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சிவகாசி வெள்ளம் சாமியாா் தெருவைச்சோ்ந்தவா் ரமேஷ்குமாா்(43). இவரது மனைவி அமுதா(33). இவா்களுக்கு இரு மகன்கள் உள்ளனா். ரமேஷ்குமாா் தனது தொழிலுக்காக மனைவி அமுதாவின் 17 பவுன் நகையை அடகு வைத்தாராம். இதில் மனம் உடைந்த அமுதா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com