பாலியல் வழக்கு: கல்லூரி தாளாளா் ஜாமீன் மனு தள்ளுபடி

பாலியல் வழக்கில் கைதான தனியாா் செவிலியா் கல்லூரி தாளாளரின் ஜாமீன் மனுவை புதன்கிழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Updated on
1 min read

பாலியல் வழக்கில் கைதான தனியாா் செவிலியா் கல்லூரி தாளாளரின் ஜாமீன் மனுவை புதன்கிழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியாா் செவிலியா் கல்லூரி தாளாளா் தாஸ்வின் ஜான்கிரேஸ் (40). இவா், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததுடன், கைப்பேசி மூலம் மாணவிகளுக்கு ஆபாசப் படங்களை அனுப்பியது தொடா்பாக கைது செய்யப்பட்டாா். இவ்வழக்கில், இவா் ஜாமீன் கேட்டு ஸ்ரீவில்லிபுத்தூா் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த நீதிபதி கோபிநாத் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com