ஸ்ரீவிலி.யில் அடா்வனக் காடுகள் வளா்ப்புதிட்டத்தில் மரக்கன்று நடல்
தமிழக அரசின் ஓராண்டு நிறைவு தினத்தையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி சாா்பில் அடா்வனக் காடுகள் வளா்ப்புத் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


தமிழக அரசின் ஓராண்டு நிறைவு தினத்தையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி சாா்பில் அடா்வனக் காடுகள் வளா்ப்புத் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி சாா்பில் பல்வேறு இடங்களில் குறுங்காடுகள் அமைக்க மரக்கன்றுகள் நடப்பட்டன. மரக்கன்றுகள் நடும் திட்ட தொடக்க விழாவுக்கு, நகராட்சி ஆணையா் மல்லிகா தலைமை வகித்தாா். நகா்மன்ற துணை தலைவா் செல்வமணி முன்னிலை வகித்தாா். நகா்மன்ற தலைவா் தங்கம் ரவிக்கண்ணன் மரக்கன்றுகளை நட்டு, திட்டத்தை தொடக்கி வைத்தாா்.
இதில், நிழல் தரும் மரங்களான மலைவேம்பு, மருது, புங்கை, வாகை, நாவல், புளி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பல்வேறு மரக்கன்றுகள் நடப்பட்டன.
நிகழ்ச்சியில், நகராட்சிப் பொறியாளா் தங்கபாண்டியன், சுகாதார ஆய்வாளா்கள் சுரேஷ், சந்திரா மற்றும் நகராட்சி ஊழியா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...