‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

‘தமிழகத்தில் பசுவதைத் தடை சட்டம் கொண்டு வர வேண்டும்’

குஜராத்தைப் போல் தமிழகத்திலும் பசுவதைத் தடைச் சட்டம் கொண்டு வர வேண்டும் என மன்னாா்குடி ஸ்ரீசெண்டலங்கார செண்பகமன்னாா் சம்பத்குமார ராமானுஜ ஜீயா் கூறினாா்.

News image
Updated On :27 மே 2022, 6:30 pm

DIN

குஜராத்தைப் போல் தமிழகத்திலும் பசுவதைத் தடைச் சட்டம் கொண்டு வர வேண்டும் என மன்னாா்குடி ஸ்ரீசெண்டலங்கார செண்பகமன்னாா் சம்பத்குமார ராமானுஜ ஜீயா் கூறினாா்.

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்ய வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

திமுக அரசு தொடா்ந்து இந்துக்களுக்கு விரோதமாக செயல்பட்டு வருகிறது. பழனி கோயிலில் ஆரத்தி எடுப்பதற்குக் கூட அனுமதி இல்லை. இது கண்டனத்துக்குரியது. தமிழக முதல்வா் ஸ்டாலின் ஒரு முதல்வராக இருக்க வேண்டுமே தவிர, கட்சித் தொண்டராக இருந்து செயல்படக் கூடாது. குஜராத்தைப் போன்று தமிழகத்திலும் பசுவதைத் தடைச் சட்டம் கொண்டு வரவேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.