‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மனைவி குழந்தை மாயம் என கணவா் புகாா்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மனைவி குழந்தை மாயமானது குறித்து போலீசாா் வழக்கு பதிந்து புதன்கிழமை இரவு விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :6 அக்டோபர் 2022, 5:05 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மனைவி குழந்தை மாயமானது குறித்து போலீசாா் வழக்கு பதிந்து புதன்கிழமை இரவு விசாரித்து வருகின்றனா். ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே நாத்தம்பட்டி ஆத்தூரை சோ்ந்தவா் கருப்பசாமி (38). இவா் கடந்த 2016ம் ஆண்டு கலிங்கப்பட்டியை சோ்ந்த முனீஸ்வரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டாா். இவா்களுக்கு நிவேதா (6)என்ற மகளும் ரோஹித் குமாா் (1) என்ற மகனும் உள்ளனா். கணவன் மனைவிக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் அக்டோபா் 4-ம் தேதி கலிங்கப்பட்டியில் உள்ள தந்தை வீட்டிற்கு சென்ற முனீஸ்வரி வீடு திரும்பவில்லை. இதுகுறித்து கருப்பசாமி கலிங்கப்பட்டியில் உள்ள மனைவியின் உறவினரிடம் விசாரித்த போது பெண் குழந்தையை மட்டும் வீட்டில் விட்டுவிட்டு முனீஸ்வரி சென்று விட்டதாக தெரிவித்துள்ளாா். இந்நிலையில் முனீஸ்வரியை காணவில்லை என கருப்பசாமி போலீசில் புகாா் அளித்தாா்.இச்சம்பவம் குறித்து நத்தம்பட்டி போலீசாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.