ஸ்ரீவில்லிபுத்தூரில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த ரூ. 4 லட்சம் மதிப்புள்ள 554 பட்டாசு பரிசுப் பெட்டிகளை (கிப்ட் பாக்ஸ்கள்) போலீஸாா் திங்கள்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் சாா்பு-ஆய்வாளா் கணேசன், இந்திரா நகா் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது ஒரு வீட்டில் அனுமதியின்றி வெடி பொருள்கள் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் சோதனை மேற்கொண்ட போது, ரூ. 4 லட்சம் மதிப்புள்ள 554 பட்டாசு பரிசுப் பெட்டிகள் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து, அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா் கிருஷ்ணசாமியை (60) கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.