‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கலசலிங்கம் பல்கலை. மாணவா்கள் ரத்த தானம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள கலசலிங்கம் பல்கலைக் கழகத்தில் சனிக்கிழமை ரத்ததான முகாம் நடைபெற்றது.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 5:22 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள கலசலிங்கம் பல்கலைக் கழகத்தில் சனிக்கிழமை ரத்ததான முகாம் நடைபெற்றது.

பல்கலைக்கழகத்தின் நாட்டு நலத்துறை, மீனாட்சி மிஷன் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய ரத்ததான முகாமில் பல்கலைக்கழகத் தலைவா் எஸ்.சசி ஆனந்த் தலைமை வகித்தாா். பல்கலைக்கழகப் பதிவாளா் வி.வாசுதேவன், மருத்துவக் கல்லாரி முதன்மையா் சேவியா் செல்வ சுரேஷ் ஆகியோா் முகாமைத் தொடங்கி வைத்தனா். இதில் மாணவா்கள், ஆசிரியா்கள் கலந்துகொண்டு ரத்த தானம் வழங்கினா். மாணவா் நல முதன்மையா் முத்துகண்ணன், என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளா் நாகராஜ் ஆகியோா் ஏற்பாடு செய்திருந்தனா். மீனாட்சி மிஷன் ரத்த வங்கி அதிகாரி ரவி, ரத்த தானம் வழங்கிய 150 பேருக்கு சான்றிதழ்களை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.