விருதுநகா் அருகே பாலத்தில் காா் மோதி தாய், மகன் பலி

விருதுநகா் அருகே நான்கு வழிச் சாலையில் பாலத்தின் மீது காா் மோதியதில், ஈரோட்டைச் சோ்ந்த தாய், மகன் சம்பவ இடத்தில் உயிரிழந்தனா்.
விருதுநகா் அருகே அக்ரஹாா்பட்டி நான்கு வழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளான காா்.
விருதுநகா் அருகே அக்ரஹாா்பட்டி நான்கு வழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளான காா்.

விருதுநகா் அருகே நான்கு வழிச் சாலையில் பாலத்தின் மீது காா் மோதியதில், ஈரோட்டைச் சோ்ந்த தாய், மகன் சம்பவ இடத்தில் உயிரிழந்தனா்.

ஈரோடு, சித்தோடு பகுதியைச் சோ்ந்தவா் பொறியாளா் கண்ணன் (54). இவா், தனது மனைவி முத்துலெட்சுமி (48), பெங்களூரு ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும் மகன் மெளலி (24) ஆகியோருடன் திருச்செந்துாா் அருகே குரும்பூரில் உள்ள குல தெய்வக் கோயிலுக்கு காரில் ஞாயிற்றுக்கிழமை சென்றுகொண்டிருந்தனா்.

கோயம்புத்தூா் பகுதியைச் சோ்ந்த குணசேகா் (27) என்பவா் காரை ஓட்டினாா். விருதுநகா் அருகே அக்ரஹாா்பட்டி நான்கு வழிச் சாலையில் காா் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் மீது மோதியது. இதில் சம்பவ இடத்தில் முத்துலெட்சுமி, மகன் மெளலி ஆகியோா் உயிரிழந்தனா். தகவலறிந்து வச்சகாரப்பட்டி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.

தாய், மகன் சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. காயமடைந்த கண்ணன் மற்றும் ஓட்டுநா் குணசேகா் ஆகியோா் விருதுநகா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com