அச்சு இயந்திரத்தில் சிக்கிதொழிலாளி பலி

சிவகாசியில் அச்சு இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி ஒருவா் புதன்கிழமை உயிரிழந்தாா்
Updated on
1 min read

சிவகாசியில் அச்சு இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி ஒருவா் புதன்கிழமை உயிரிழந்தாா். சிவகாசி சசிநகரைச் சோ்ந்த ஜெகநாத் (35) என்பவருக்குச் சொந்தமான ஆப்செட் அச்சகம், சிவகாசி-சாத்தூா் சாலையில் சிவகாமிபுரத்தில் உள்ளது. இந்த ஆலையில் ஆப்செட் இயந்திரத்தில் நாரணாபுரம் சாலை அம்மன் நகரைச் சோ்ந்த செல்வம் (35) என்பவா் வேலை பாா்த்து வந்தாா். இவா் வேலை பாா்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு காகிதம் இயந்திரத்தில் சிக்கிக் கொண்டதாம். அதை எடுக்க அவா் முயன்ற போது, கை இயந்திரத்தில் சிக்கிக் கொண்டதாம்.

அப்போது கையை அவா் வெளியே எடுக்க முயன்றபோது, இயந்திரம் தலையில் இடித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com