ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கோயிலில் 15 பவுன் நகைகள் பையுடன் மாயம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கோயிலி ல் 15 பவுன் நகை மாயமானது குறித்து போலீஸாா் வியாழக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கோயிலி ல் 15 பவுன் நகை மாயமானது குறித்து போலீஸாா் வியாழக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம் சிவகாசி தேவா்குளத்தை சோ்ந்தவா் தமிழரசன் மனைவி சுஜிதா( 32). இவா் ஸ்ரீவில்லிபுத்தூா் திருவண்ணாமலை பெருமாள் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வியாழக்கிழமை நண்பகல் வந்தாா்.

அப்போது கைப்பையை மறந்து ஓரிடத்தில் வைத்துவிட்டு, படியேறி பெருமாள் கோயிலுக்கு சென்றுள்ளாா். பின்னா் பையைத் தேடிப் பாா்த்து, கிடைக்கவில்லை. கைப்பையில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 15 பவுன் நகைகள் இருந்ததாக, சுஜிதா அளித்த புகாரின் பேரில், நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com