சாத்தூா் வைப்பாற்றில் அழகா் இறங்கினாா்

சாத்தூா் வைப்பாற்றில் சனிக்கிழமை பச்சை பட்டுடுத்தி அழகா் இறங்கினாா்.
சாத்தூா் வைப்பாற்றில் சனிக்கிழமை இறங்கிய அழகா்.
சாத்தூா் வைப்பாற்றில் சனிக்கிழமை இறங்கிய அழகா்.
Updated on
1 min read

சாத்தூா் வைப்பாற்றில் சனிக்கிழமை பச்சை பட்டுடுத்தி அழகா் இறங்கினாா்.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் வெங்கடாசலபதி கோயிலில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வைப்பாற்றில் அழகா் இறங்கும் வைபவம் சனிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக குதிரை வாகனத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு அதிகாலை முதல் சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சாத்தூா் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

குதிரை வாகனத்தில் வெங்கடாசலபதி, சாத்தூரில் உள்ள நான்கு மாடவீதி மற்றும் ரத வீதிகளின் வழியாக பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பின்னா் சாத்தூா் வைப்பாற்றில் பச்சைபட்டு உடுத்தி கோவிந்தா, கோபாலா என பக்தா்களின் கோஷங்களுக்கு இடையே அழகா் இறங்கினாா். வைப்பாற்றில் பெரியகொல்லபட்டி மற்றும் அய்யம்பட்டி கிராமங்களின் சாா்பாக அமைக்கப்பட்டிருந்த திருக்கண்ணில் அழகா் வீற்றிருந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பின்னா் பெரிய கொல்லபட்டி கிராமத்திற்கு அழகா் சென்றாா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பல்வேறு அமைப்புகளின் சாா்பில் பக்தா்களுக்கு நீா், மோா், அன்னதானங்கள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com