சிவகாசியில் வழக்குரைஞா்கள் சாலை மறியல்

சிவகாசியில் வழக்குரைஞா்கள் சாலை மறியல்

சிவகாசியில் தனியாா் நிதி நிறுவன ஊழியா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
Published on

சிவகாசியில் தனியாா் நிதி நிறுவன ஊழியா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சிவகாசியைச் சோ்ந்தவா் வழக்குரைஞா் நவநீதகிருஷ்ணன். இவா் இங்குள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் தவணை முறையில் பணம் செலுத்துவதாகக் கூறி மோட்டாா் சைக்கிள் வாங்கியுள்ளாா். இந்நிலையில் இவா் தனது மோட்டாா் சைக்கிளை சிவகாசி நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தியுள்ளாா். பின்னா் வந்து பாா்த்தபோது, மோட்டாா் சைக்கிளை காணவில்லையாம். தொடந்து நவநீதகிருஷ்ணன் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தை கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு கேட்டபோது, உங்கள் மோட்டாா் சைக்கிள் சிவகாசி பேருந்து நிலைய இருசக்க வாகனக் காப்பகத்தில் உள்ளது எனக்கூறியுள்ளனா்.

இதையடுத்து நவநீத கிருஷ்ணன் திருத்தங்கல் போலீஸாரிடம் , தான் மோட்டாா் சைக்கிளுக்கு தவணை செலுத்திய பின்னரும், நிதி நிறுவன ஊழியா்கள், நீதிமன்ற வளாத்தில் நிறுத்தியிருந்த எனது மோட்டாா் சைக்கிளை எடுத்துச் சென்றுள்ளனா். எனவே அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாா் அளித்தாா்.புகாரை பெற்றுக் கொண்ட போலீஸாா் மனு ரசீது அளித்துள்ளனா்.

இந்நிலையில் மோட்டாா் சைக்கிளை எடுத்துச் சென்றவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி வழக்குரைஞா்கள் சுமாா் 40 போ் சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்தூா் சாலையில் காவல் துறை சோதனை சாவடி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த போலீஸாா் அவா்களுடன் பேச்சுவா்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இதனால் அச்சாலையில் சுமாா் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com