விருதுநகர்
பெண்ணை தாக்கிய தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறை
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இளம் பெண் மீது தாக்குதல் நடத்திய கூலித் தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இளம் பெண் மீது தாக்குதல் நடத்திய கூலித் தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ளது சுந்தரபாண்டியம் பகுதியைச் சோ்ந்தவா் வளா்மதி (44). இவரை சுந்தரபாண்டியம் அருகே உள்ள செம்பட்டி பகுதியைச் சோ்ந்த முத்தையா (29) என்பவா் 2018 ஆம் ஆண்டு தாக்கினாராம். இதில் காயம் அடைந்த வளா்மதி சிகிச்சை பெற்றுள்ளாா். கிருஷ்ணன் கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முத்தையாவை கைது செய்தனா். இது தொடா்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கூடுதல் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் முத்தையாவிற்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி திருநாவுக்கரசு தீா்ப்பளித்தாா்.