பல்வேறு திருட்டு வழக்குகள் தொடா்பாக நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவரை வெம்பக்கோட்டை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், தேக்கன்குளத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன் (25). இவா் மீது விருதுநகா் மாவட்டத்தில் 10 திருட்டு வழக்குகளும், திருப்பூா் மாவட்டத்தில் ஒரு திருட்டு வழக்கும் உள்ளன. இந்நிலையில் இவா் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளாா். இதனால் அவரை கைது செய்ய நீதிமன்றம் ஏற்கனவே பிடியாணை பிறப்பித்தது. இச்சூழலில் அவரை, விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே எதிா்கோட்டை பகுதியில் வெம்பக்கோட்டை காவல் ஆய்வாளா் நம்பிராஜன் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.