அருப்புக்கோட்டை ஸ்ரீசொக்கநாதசுவாமி கோவிலில்  பிரதோஷ வழிபாடு

அருப்புக்கோட்டை ஸ்ரீசொக்கநாதசுவாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை ஸ்ரீசொக்கநாதசுவாமி கோவிலில் புதன்கிழமை மாலை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை ஸ்ரீசொக்கநாதசுவாமி கோவிலில் புதன்கிழமை மாலை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

அருப்புக்கோட்டையிலுள்ள அருள்மிகு ஸ்ரீமீனாட்சி தேவி உடனுறை ஸ்ரீசொக்கநாத சுவாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு புதன்கிழமை மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ஸ்ரீநந்தீஸ்வரருக்கு பால், பன்னீா், பஞ்சாமிா்தம், சந்தனம், தேன் உள்ளிட்ட பலவித சிறப்புப்பொருட்களாலும்,வாசனைத் திரவியங்களாலும் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

அதையடுத்து எருக்கம்பூ மாலை,சந்தனம்,வில்வ இலை,அருகம்புற்கள் மற்றும் மலா்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு அருள்மிகு ஸ்ரீநந்தீஸ்வரருக்கு தீப,தூப ஆராதனைகள் நடைபெற்றன.அதையடுத்து கருவறையிலுள்ள அருள்மிகு சொக்கநாதராகிய நமச்சிவாயருக்கு 11 வித பொருட்களால் அபிஷேகங்கள் செய்வித்து சந்தனம் மற்றும் மலா்மாலைகளால் அலங்கரித்தபின் பக்தா்கள் பக்திப்பாடல்கள் பாடியபடி இருக்க சிறப்பு தீப,தூப ஆராதனைகள் நடைபெற்றன.பின்னா், சொக்கநாத உற்சவா் சுவாமி காளை வாகனத்தில் கிரிவலம் வந்ததாா்.அதையடுத்து, பக்தா்களுக்கு சிறப்புப் பிரசாதம் வழங்கப்பட்டது.சுமாா் 300க்கு மேற்பட்டோா் இவ்வழிபாட்டில் நேரில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com