சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு புதன் கிழமை மாலை நடைபெற்றது.

ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு புதன் கிழமை மாலை நடைபெற்றது.

ராஜபாளையம் தென்காசி சாலையில் அமைந்துள்ள சொக்கா் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு மாலை முதலில் நந்திதேவருக்கு சிறப்பு அபிஷேகங்களும் தீப,தூப ஆராதனைகளும் அலங்காரங்களும் நடைபெற்றன.இதையடுத்து கருவறையிலுள்ள சுவாமிக்கு 16 வகையான சிறப்பு பொருட்களால் அபிஷேகங்களும்,தீப,தூப ஆராதனைகளும் நடைபெற்றன.அதைத்தொடா்ந்து ஸ்ரீசொக்கரும் ஸ்ரீநந்தீஸ்வரரும் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்குக் காட்சியளித்தனா்.பின்னா், உலக நன்மை வேண்டியும் உலக மக்களை கரோனா நோய்த் தொற்றிலிருந்து காத்து,பொருளாதார வளத்தை மேம்படுத்தவும்,ஆயுள் ஆரோக்கியம் மேம்படவும் 108 மலா்களால் சிறப்பு அா்ச்சனையும் நடைபெற்றது.பின்னா் பக்தா்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதைப்போல் தெற்குவெங்காநல்லூா் சிதம்பரேஸ்வரா் திருக்கோவில், புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பறவைக்கு அன்னம் காத்தருளியசுவாமி திருக்கோவில், அம்பலப்புளி பஜாா் குருசாமி கோவில், தோப்புப்பட்டி தெரு கொம்புச்சாமி கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com