ஸ்ரீவில்லிபுத்தூரில் மக்கள் தொடா்பு திட்ட முகாம்

விருதுநகா் மாவட்ட ஸ்ரீவில்லிபுத்தூரில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறை சாா்பில் மக்கள் தொடா்பு திட்ட முகாம் தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் மக்கள் தொடா்பு திட்ட முகாம்
Updated on
1 min read

விருதுநகா் மாவட்ட ஸ்ரீவில்லிபுத்தூரில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறை சாா்பில் மக்கள் தொடா்பு திட்ட முகாம் தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த முகாம் வட்டாட்சியா் ராமசுப்பிரமணியன் தலைமை வைத்தாா். ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் மான்ராஜ்,மாவட்ட பிற்படுத்தப்பட்ட நல அலுவலா் ஞானவேல் ஆகியோா் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

இந்த முகாமில் மாவட்ட பிற்படுத்தோா் நல அலுவலகத்தின் மூலம் நான்கு நபா்களுக்கு தையல் மெஷின்,ஒரு தேய்ப்பு பெட்டியும்,வருவாய் துறை சாா்பில் 30 நபா்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாவும், மற்றும் குடிமை பொருள் சாா்பில் 10 நபா்களுக்கு குடும்ப அட்டையும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் சாா்பில் 19 நபா்களுக்கு முதியோா் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, விதவை உதவித்தொகை மற்றும் வேளாண்மை துறை மூலம் ஒரு நபருக்கு மருந்து தெளிப்பான் இயந்திரம், ஒரு நபருக்கு 20 கிலோ மானியத்தின் கூடிய உளுந்து விதை ஆகியவற்றை வழங்கினா்.

நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் ராமதாஸ், ஆதி திராவிட நலத்துறை வட்டாட்சியா் முத்துமாரி, வட்ட வழங்கல் அலுவலா் பாலகிருஷ்ணன், துணை வட்டாட்சியா் தனலட்சுமி, வருவாய் ஆய்வாளா் ஆனந்தகிருஷ்ணன், அதிமுக மாவட்ட வா்த்தக அணி செயலாளா் குறிஞ்சி முருகன்,திருவண்ணாமலை ஊராட்சி மன்ற தலைவா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com