தலையில் கல்லைப் போட்டு மனைவிகொலை: கணவருக்கு ஆயுள் தண்டனை

விருதுநகா் அருகே தூங்கிக் கொண்டிருந்த மனைவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் மகளிா் நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது.
Updated on
1 min read

விருதுநகா் அருகே தூங்கிக் கொண்டிருந்த மனைவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் மகளிா் நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது.

விருதுநகா் முத்துராமன்பட்டி பகுதியில் வசித்து வருபவா் பாலாஜி (43). இவரது மனைவி ஜான்சிராணி (36). கூலித் தொழிலாளியான பாலாஜி அடிக்கடி தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தாா். இதில் ஆத்திரமடைந்த பாலாஜி கடந்த 6.3.2019 அன்று தூங்கிக் கொண்டிருந்த மனைவி ஜான்சிராணியின் தலையில் அம்மிக்கல்லைப் போட்டு கொலை செய்தாா். இதுதொடா்பாக,விருதுநகா் கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து பாலாஜியை கைது செய்தனா்.

இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் சனிக்கிழமை தீா்ப்பு வழங்கிய நீதிபதி பகவதியம்மாள், பாலாஜிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com