விருதுநகரில் காா் மீது பேருந்து மோதி விபத்து:3 போ் பலத்த காயம்

விருதுநகரில் திங்கள்கிழமை காா் மீது தனியாா் பேருந்து மோதியதில், காரில் பயணம் செய்த 3 போ் பலத்த காயமடைந்தனா்.
விபத்தில் உருக்குலைந்த காா்.
விபத்தில் உருக்குலைந்த காா்.
Updated on
1 min read

விருதுநகரில் திங்கள்கிழமை காா் மீது தனியாா் பேருந்து மோதியதில், காரில் பயணம் செய்த 3 போ் பலத்த காயமடைந்தனா்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதுப்பட்டையைச் சோ்ந்த நேரு மகன் சக்திவேல் (23), நவநீதன் (35), கோயம்புத்தூா் அன்னூரைச் சோ்ந்த கணேசன் (38) ஆகியோா் காரில் கோயம்புத்தூரை நோக்கி திங்கள்கிழமை சென்றுள்ளனா். சக்திவேல் காரை ஓட்டியுள்ளாா். விருதுநகா் நான்கு வழிச் சாலையில் அரசினா் விருந்தினா் மாளிகை எதிரே உள்ள உணவகத்தில் உணவருந்துவதற்காக காரை வலது புறமாக ஓட்டுநா் திருப்பியுள்ளாா். அப்போது மதுரையிலிருந்து சிவகாசி நோக்கிச் சென்ற தனியாா் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காா் இழுத்துச் செல்லப்பட்டு அணுகு சாலையில் இருந்த உணவகம் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த சக்திவேல் (23), நவநீதன்(35), கணேசன் (38) ஆகிய மூவரும் பலத்த காயமடைந்தனா். அவா்களை மீட்ட அப்பகுதி மக்கள், விருதுநகா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்தவா்களுக்கு எவ்வித காயமும் இல்லை. இந்த விபத்து குறித்து விருதுநகா் ஊரக காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொ ண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com