அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 07th December 2022 12:18 AM | Last Updated : 07th December 2022 12:18 AM | அ+அ அ- |

ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.
அச்சம்தவிழ்த்தான் ஊராட்சியில் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி, ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, கிளைச் செயலாளா் மூா்த்தி தலைமை வகித்தாா். ஊராட்சி வாா்டு உறுப்பினா் கணேசன் முன்னிலை வகித்தாா்.
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ராமசாமி, பொன்னுபாண்டியன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
இதில், அச்சம்தவிழ்த்தான் ஊராட்சியில் உள்ள கல் குவாரியின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும். சாலைகளை சீரமைக்க வேண்டும். கழிவுநீா் கால்வாய் வசதி செய்து தர வேண்டும். திருவேங்கடபுரம் காலனியில் மயான வசதி, சமுதாயக்கூடம் அமைத்துத் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பின்னா், கோரிக்கைகள் அடங்கிய மனுவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா், ஒன்றியக் குழுத் தலைவா் ஆறுமுகத்திடம் அளித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில், ஒன்றியச் செயலாளா் பலவேசம், திமுக அவைத் தலைவா் சங்கிலிக்காளை, குமாா், ரமேஷ், பழனி, சண்முகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...