ராஜபாளையம் அருகே மலை மீது அனுமதியின்றி வைக்கப்பட்ட இரு சிலுவைகளை வருவாய்த் துறையினா் சனிக்கிழமை அகற்றினா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே சேத்தூரை அடுத்த முத்துச்சாமியாபுரம் கூமாட்சி மலையில் அனுமதியின்றி, கடந்த மாதம் 2 சிலுவைகள் வைக்கப்பட்டன. இதுதொடா்பாக, கடந்த மாதம் நடைபெற்ற சட்டம் ஒழுங்கு ஆய்வுக் கூட்டத்தில் சிலுவைகளை அகற்ற மாவட்ட ஆட்சியா் ஜெ.மேகநாதரெட்டி உத்தரவிட்டாா்.
அதனடிப்படையில், ராஜபாளையம் வட்டாட்சியா் சீனிவாசன், மண்டல துணை வட்டாட்சியா் கோதண்டராமன் தலைமையில் மலை உச்சியில் வைக்கப்பட்டிருந்த 2 சிலுவைகள் அகற்றப்பட்டன.
இதையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூா் டிஎஸ்பி சபரிநாதன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.